நகைச்சுவை
கொஞ்சம் சிரிக்கலாம், வாங்க!
பதிப்பு 1
ஒருவர்; நாட்டுல மக்களிடம் இப்பவெல்லாம் விழிப்புணர்ச்சி வளர்ந்துட்டுதுங்க.
மற்றவர்; எதை வச்சி சொல்றீங்க? தேர்தல் முடிவை வச்சா?
ஓருவர்: இல்லீங்க. முன்ன மாதிரி ஈஸியா யார்கிட்டயும் கைமாத்து வாங்க முடியலையே... அதுதான்!
*****************
நண்பன் 1 : எங்கப்பாவுக்குப் பால் வியாபாரம் கைகொடுக்காததால் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணிட்டார்.
நண்பன் 2 : மறுபடியும் கறக்கற தொழில்தானா?
----------------------
பெண் 1 : காலமே மாறிப் போச்சுடி! அந்தக் காலத்துல எலிக்காகப் பொறி வைப்பாங்களாம்! இப்ப பொறிக்காக எலி வைக்கிறாங்க!
பெண் 2 : எதை வச்சு சொல்றே?
பெண் 1 : கணிப் 'பொறி'க்காக 'மவுஸ்' வைக்கிறாங்களே!
..........................
ஒருவர் ; அவர் ஒரு மகா கஞ்ச பிரபு!
மற்றவர் : அப்படியா ... எப்படி சொல்றீங்க?
ஓருவர் : தீயணைப்பு நிலையத்துக்குக்கூட 'மிஸ்டு கால்'தான் குடுக்குறார்னா பார்த்துக்குங்களேன்!
****************
திருடன் : (சிறுவனிடம்) தம்பி உனக்கு மிட்டாய் தருகிறேன். உங்க வீட்டுல நகைகளை எங்கே வைப்பாங்க சொல்லு...
சிறுவன் : அடகுக் கடையிலே!
----------------------
ஜோதிடர் : உங்க ஜாதகப்படி இப்ப பணத்துக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு மூன்று மாதம் பல்ல கடிச்சிக்குங்க... அப்புறமா உங்களுக்கு கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.
வந்தவர் : எது பல்லா?
.........................
நோயாளி : என்ன டாக்டர் இது. மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்குப் பின் அப்படினு போட்டிருக்கீங்க..
டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க ! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.
+++++++++++++
நிருபர் : உங்கள் வயது என்ன?
நடிகை : 25
நிருபர் : இதையேதான் 15 ஆண்டுகளாக சொல்லி வருகிறீர்கள்.
நடிகை : என்னிடம் அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு கிடையாது.
***************
டாக்டர் : ஆப்பரேஷனுக்குப் பிறகு நீங்கள் ஒரு புதிய மனிதராக இருப்பீர்கள்.
நோயாளி : மருத்துவ 'பில்'லை அந்தப் பழைய மனிதருக்கே அனுப்பிவிடுங்கள்!
++++++++++++
ஆசிரியை : உன்னிடம் ஒரு வெள்ளி இருக்கிறது என்று வைத்துக்கொள். இன்னும் ஒரு வெள்ளியை உன் தகப்பனாரிடம் கேட்டாய். இப்போது உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கும்?
மாணவன் : ஒரு வெள்ளி.
ஆசிரியை : உனக்கு கணக்கு தெரியவில்லையே!
மாணவன் : உங்களுக்கு என் தகப்பனாரைப் பற்றி தெரியாதே.
******************
ஆசிரியர் : 1809-ஆம் ஆண்டு என்ன நடந்தது?
கணேசன் : ஆபிரகாம் லிங்கன் பிறந்தார்.
ஆசிரியர் : சரி, 1812-ஆம் ஆண்டு நிகழ்ந்தது என்ன?
கணேசன் : அவருக்கு மூன்று வயதாகியது.
------------------------
ஆசிரியை ; முதலாவது அமரிக்க ஜனாதிபதிக்குப் பிறகு பதவியேற்றவர் யார்?
மாணவன் : இரண்டாவது ஜனாதிபதி.
******************
மகன் : அப்பா, கல்யாணம் செய்துகொள்ள எவ்வளவு செலவாகும்?
தகப்பனார் ; எனக்கு சரியாகத் தெரியவில்லை, மகனே. நான் இன்னும் செலவழித்துக் கொண்டுதானிருக்கிறேன்!